K U M U D A M   N E W S

#BREAKING | அமைச்சர் உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி பயங்கர விபத்து - பதைபதைக்க வைக்கும் காட்சி

வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்

புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீது பாச மழை கொட்டும் அமைச்சர்கள்

கதிகலங்க வைத்த வடமாநிலத்தவர்கள்.. துப்பாக்கியால் பேசிய தமிழக போலீஸ்.. என்ன நடந்தது..? |

கேரளாவில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கலில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை கைது செய்ய சென்றபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், சேலம் சரக டிஜிபி உமா செய்தியாளர்களை சந்தித்து இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.

“மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது... சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்” ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 சதவீதம் வரை வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை மிரள விட்ட என்கவுன்டர்.. விரைந்து வந்த கேரளா போலீஸ்

கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த கேரளா போலீசார் வருகை தந்துள்ளனர்.

Rain Alert : தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு..... வெளிய கவனமா போங்க!

Heavy Rain in Tamil Nadu : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செப். 27) செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jayam Ravi: “தனியா அக்கவுண்ட் கிடையாது... எனக்கு மரியாதையே இல்ல..” டென்ஷனான ஜெயம் ரவி!

தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடமும் அவர் மனம் திறந்து பேசியிருந்த நிலையில், மனைவி ஆர்த்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

'அச்சுறுத்தலான பள்ளிக் கட்டடங்களை அகற்றுக’ - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

O. Panneerselvam : அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது - ஓ. பன்னீர்செல்வம் பேட்டி!

O Panneerselvam Press Meet in Chennai : "அஇஅதிமுக(AIADMK) ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான்; ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.