K U M U D A M   N E W S
Advertisement

தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை.. ரூ.10 லட்சம் அபராதம்.. முதல்வர் ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நீலகிரியில் கனமழை நீடிக்கும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rajini Salary: “ரஜினி வேணும்ன்னா கேக்குற சம்பளம் கொடுங்க..” கட் & ரைட்டா பேசின கமல்..!!

ரஜினி தான் நடிக்க வேண்டும் என்றால் அவர் கேட்கின்ற சம்பளத்தை கொடுத்து தான் ஆக வேண்டும் என கமல்ஹாசன் அதிரடியாக கூறியுள்ளார்.

விஜய் சார் முதல்வராவார்...கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்.. நாங்குநேரி சின்னத்துரை நம்பிக்கை

2026 ஆம் ஆண்டில் விஜய் சார் முதல்வராவார் என்ற நம்பிக்கை இருக்கு. அவர் முதலமைச்சர் ஆன பிறகு கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று நாங்குநேரி சின்னத்துரை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம்..4 ஆண்டுகளில் எவ்வளவு? அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2021 ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 96,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96737 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 4,63,710 வழக்குகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளி விவரங்கள் குமுதம் செய்திகளுக்கு கிடைத்துள்ளது.

நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு மோசடிகள்.. லோக்சபாவை முடக்கிய இந்தியா கூட்டணி எம்பிக்கள்.. ராகுல் மைக் துண்டிப்பு

டெல்லி: லோக்சபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் ஜூலை 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். லோக்சபாவில் நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கல்வி விருது விழா.. அன்பு தம்பி தளபதி விஜய்.. முதல் ஆளாய் வாழ்த்து சொன்ன சீமான்

ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் தம்பி விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விஜய்.

விஜய் கல்வி விருது விழாவில் சுடச்சுட தயாராகும் மதிய விருந்து.. என்ன மெனு தெரியுமா?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கு பரிசோடு தடபுடலாக விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு பரிமாறப்பட்ட நிலையில் மதிய உணவில் என்ன மெனு இடம் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.