K U M U D A M   N E W S

‘இனி NO PARKINGக்கு NO சொல்லுங்க’.. அதிரடியாக உத்தரவிட்ட காவல் துறை!

மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

’உதயநிதி வீடுகள் வழங்கவில்லை’.. பொதுமக்கள் சாலை மறியல்.. சென்னையில் பரபரப்பு!

‘’கண்ணப்பர் திடலில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 40 வருடங்களாக வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கவில்லை’’ என்று ஒருபகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள்.

'எனது குடும்பம் நாசமாக போக வேண்டும்'.. கற்பூரம் ஏற்றி சபதம் எடுத்த கருணாகர ரெட்டி!

திருப்பதி கோயிலின் புனிதத்தன்மையை களங்கப்படுத்தி, மக்களின் உணவுர்களை புண்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை கருணாகர ரெட்டி மறுத்து வந்தார்.

‘கருத்தியலின் அடையாளம் சீதாராம் யெச்சூரி’..முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

''கலைஞர் மீதும் என் மீதும் அன்பு கொண்டவர் தோழர் சீதாராம் யெச்சூரி. சமூக நீதிக்காகவும், பெண்களின் சம உரிமைக்காவும் போராடினார். அவர் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தார்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரூ.10 கோடி நஷ்ட ஈடு - செல்வப்பெருந்தகை எடுத்த அதிரடி முடிவு!

Selvaperunthagai Press Meet: பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

‘வாழ்விழந்த மீனவர்கள்.. 40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஒரே நாளில் 2வது சம்பவம்.. மீண்டும் ரவுடிக்கு துப்பாக்கி சூடு - திருச்சியில் பரபரப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜம்பு என்ற ரவுடியை வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். 

சீசிங் ராஜா என்கவுன்ட்டர்.. சம்பவ இடத்தில் மாஜிஸ்திரேட் ஆய்வு

சென்னை நீலாங்கரை அக்கரை பகுதியில் ரவுடி சீசிங் ராஜா இன்று காலை போலீசார் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இடத்தில் சோழிங்கநல்லூர் மாஜிஸ்திரேட் ஆய்வு மேற்கொண்டார்.

ஒரே இடத்தில் இவ்ளோ Collection-ஆ.. கார் கண்காட்சியை கண்டு திகைத்து நின்ற இளைஞர்கள்..

சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

ஒரே இடத்தில் இவ்ளோ Collection-ஆ.. கார் கண்காட்சியை கண்டு திகைத்து நின்ற இளைஞர்கள்..

சென்னையில் நடைபெற்ற சொகுசு கார்களின் கண்காட்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வழக்கமான ஒன்றாக இருந்துவந்த சொகுசு கார் கண்காட்சிகள் தற்போது சென்னையிலும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியில் BMW, Benz, Audi, Mustang உள்ளிட்ட கார்களின் உயர் ரக மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட கார்களின் அணிவகுப்பும் திரட்டிருந்த இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை ரசித்து பார்த்ததுடன் இளைஞர்கள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.