Chennai Rain: அம்மா உணவகத்தில் இலவச உணவு ரெடி... சென்னையில் போக்குவரத்து நெரிசல் எப்படி..?
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. 7 கவுன்ட்டர்கள் உள்ள நிலையில் மழை நீர் தேக்கம் காரணமாக 2 கவுன்ட்டர்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடி செல்கின்றன.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தூய்மைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைநீருடன் அடித்து வரப்பட்ட குப்பைகள், மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று பெய்த கனமழை இன்று இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னை பாரிமுனையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.
தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி