கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கனமழை வெளுத்து வாங்கியது.
ஃபெஞ்சல் புயல் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடந்தபோது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 29 பேர் கொண்ட குழு வருகை புரிந்துள்ளனர்.