பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.