#BREAKING : மகாவிஷ்ணு ஜாமின் கோரி மனுத்தாக்கல்!
Mahavishnu Bail Petition: mமகாவிஷ்ணு ஜாமின் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Mahavishnu Bail Petition: mமகாவிஷ்ணு ஜாமின் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மகாவிஷ்ணு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்
நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.
விசிக மதுவிலக்கு மாநாடு நடத்துவதில் எந்த அரசியலும் இல்லை என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் தனது கருத்தை தெரிவிப்பதற்காக மட்டுமே மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
திருமாவளவன் நடத்தும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
“கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.