K U M U D A M   N E W S

சென்னைதான் டார்கெட்...! வங்க கடலில் மாறிய ஆட்டம்..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எதையுமே செய்யவில்லை - திமுக அரசு மீது இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு ஆட்டோ... 17 பேரின் நிலை என்ன?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து, விவசாய பணிக்குச் சென்ற 15 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த பெண்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய இடத்திற்கு குறி வைத்த ED.. பரபரப்பில் சென்னை

மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லீவா, இல்லையா?.. கன்ஃபியூஸ் ஆன பெற்றோர்கள்.. பிள்ளைகளை தயார்படுத்தியது வீண்

தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

வனத்துறையினருக்கு கல்தா கொடுத்து தப்பியோடிய சிறுத்தை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பியோடியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

விபத்துக்குள்ளான கார் – மூட்டை மூட்டையாக கிடைத்த பொருளால் போலீசார் அதிர்ச்சி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

தொடரும் அட்டூழியம் - மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை

பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.