காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்த ஆர்.எஸ்.பாரதி, செய்திகளில் இடம் பிடிப்பதற்காக பேச வேண்டாம் என்று மேடையிலேயே கண்டித்ததால் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவுபெற்றது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்த பொதுமக்கள் அதிவேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்து செல்வதை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர். கார் பந்தயத்தில் பங்கேற்ற சில வீரர்களின் கார்களின் பழுதடைந்து அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தன. மேலும் போட்டி விறுவிறுப்பாக நடந்தபோது நாய் ஒன்று குறுக்கே ஓடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.
Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது.