K U M U D A M   N E W S

விமான பயணம்... மதுரை மக்களுக்கு குட் நியூஸ்...

மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கிய உச்சநீதிமன்றம்

திருப்பதி லட்டில் மாட்டிறச்சி கலக்கப்பட்டது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளனர் நீதிபதிகள்.

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.... குடையை மறக்காதீங்க மக்களே!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்தம்... இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும்: அன்புமணி

வக்ஃப் சட்டத் திருத்தத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

லட்டு விவகாரம்.. திருப்பதியில் அதிரடியாக களமிறங்கிய சிறப்பு விசாரணை குழு

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் விசாரணை குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.. தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்.. அதிமுக ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் சீரான மின்விநியோகம் கோரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதிகாலையிலேயே மதுரையை அலறவிட்ட இமெயில் - பள்ளிகளில் தீவிர சோதனை

மதுரை மாநகர் நரிமேடு பகுதியில் அமைந்துள்ள மத்திய அரசின் நேந்திர வித்யாலயா, காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள ஜீவனா மற்றும் சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் ஆகிய பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

”3 மாசமா தண்ணி வரல.. ” காலிக்குடங்களுடன் போராட்டத்தில் குதித்த பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் ஊராட்சி தேனீப்பட்டி பகுதியில் 3 மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுட்டனர்.

அக்னி குண்டத்தில் தடுமாறிய பெண்! நொடிப்பொழுதில் களமிறங்கிய தீயணைப்புத்துறை| Kumudam News 24x7

சென்னை வியாசர்பாடி பகுதியில் தீப்பாஞ்சம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் விபத்து.