Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 30-09-2024
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 30-09-2024
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 30-09-2024
ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்
மீண்டும் தமிழக அரசை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. அந்த பதிவில், “அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு
மூல ஆவணங்கள் இல்லை எனக்கூறி பத்திரப்பதிவை நிராகரித்த சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடகோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டில் மாட்டிறச்சி கலக்கப்பட்டது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் கேள்விகளை அடுக்கியுள்ளனர் நீதிபதிகள்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்தத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் உணர்வுகளும் கருத்துகளும் மதிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.