K U M U D A M   N E W S

2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்டா கேட்டு போராட்டம்.. அமைச்சர் மூர்த்தி விமர்சனம்

பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல - நீதிபதி ஆவேசம்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது. மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

திருப்பூர் பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர்.

வெளுக்கப்போகும் கனமழை.... லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா?

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 19) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக் கூடாது..” கோயில் தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள், கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 19-10-2024

விரைவுச் செய்திகள்

தமிழ் தாய் வாழ்த்தில் பிழை எப்படி..? - கொதித்த அரசியல் தலைவர்கள்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசுப் பணத்தை வீணடிக்கிறாரா திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்?

அரசுப் பணத்தை வீணடிக்கிறாரா திறந்தநிலை பல்கலை துணைவேந்தர்?