K U M U D A M   N E W S
Advertisement

9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை.... நல்லா வெளுக்கப்போகுது!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 2) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.

கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் பலி.. தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ஒரு உயிர் கூட போகக் கூடாது... அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, மழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2 நகரங்களில் மினி டைடல் பூங்கா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

Monkey Pox Virus Clade 1B Positive in Kerala : நாட்டிலேயே குரங்கம்மையின் திரிபான கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்... ஜி.கே.வாசன் பேட்டி!

திமுகவில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் மக்களிடம் மனமாற்றம் இருக்காது எனவும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டதாகவும் தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை... அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Rain Update : சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Chennai Rain Update : சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.