சிறுமி பாலியல் வழக்கு... சிபிஐக்கு மாற்றம்
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமானப்படை சார்பில் சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி விமான சாகசம் நடைபெற உள்ளது. தற்போது மெரினாவில் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில், இது மிரட்டல் புரளி என தெரியவந்தது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று ஆலோசனை.
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தன்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.