K U M U D A M   N E W S

நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம்.. 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.