K U M U D A M   N E W S

நடுவழியில் சாமியை நிறுத்தம்.. மீண்டும் வடகலை-தென்கலை பிரிவினர் மோதல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது சாமியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு வடகலை - தென்கலை பிரிவினர் மோதிக்கொண்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்-கோவிந்தா...கோவிந்தா...முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் விழாவையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.