பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.
Mettupalayalam To Ooty Nilgiri Mountain Railway : மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில்சேவை மீண்டும் தொடக்கம். கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஒரு மாத காலம் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது
Madurai To Bengaluru Vande Bharat Express Train : பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்க உள்ள மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை. மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் பங்கேற்பு.
Chennai Electric Train Service Cancellation Extend : சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் தாம்பரம் செல்லாது; பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். அதே வேளையில் சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையேயும், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.