K U M U D A M   N E W S

ரத்து

கனமழை எதிரொலி... சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

சென்னையில் பெய்த கனமழையால் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கண் தானம்? - சுகாதாரத்துறை விளக்கம்

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Dhanush: தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு... அப்போ அதுதான் உண்மையா?

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில், இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாதது ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிராஃபிக் கவலை இனி வேண்டாம்.. 3 மணி நேர பயணம் 19 நிமிடத்தில்.. வரப்போகிறது பறக்கும் டாக்ஸி

விமான நிலையத்திற்கும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கும் இடையிலான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திலிருந்து 19 நிமிடங்களாக குறைக்கும் வகையிலான பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை.. 213 மருத்துவ முகாம்கள் அமைப்பு

சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி.. கொட்டும் மழையில் நேர்ந்த கொடுமை - நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி காட்சி

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.

டாஸ் கூட போடவில்லை.. மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து.. ரசிகர்கள் சோகம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் - அந்த வழி போகாதீங்க.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சேலம் மாவட்டம் மஞ்சக்குட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதையடுத்து வரிசையாக மின் கம்பங்கள் சாலையில் சாய்ந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து - காரணம் என்ன?

அதிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 16-ம் தேதி திருப்பதியில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.