வெறியாட்டம் ஆடிய மழை... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மதுரை
மதுரையில் பெய்த கனமழை காரணமாக அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்
மதுரையில் பெய்த கனமழை காரணமாக அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்
ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை. பட்டினம்காத்தான், கேணிக்கரை, அரண்மனை, வெளிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கட்டடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வந்ததாகவும், கட்டட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.
மதுரையில் பெய்த கனமழையால் அங்குள்ள உழவர் சந்தை, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.