ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மீண்டும் தொடங்கியது மலை ரயில் சேவை
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது.
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது.
மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.
திருப்பதியில் கனமழை காரணமாக ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை நாளை வரை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.