K U M U D A M   N E W S

போதை

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் 9.7 கிலோ குட்கா பதுக்கல் - வடபழனியில் முதியவர் கைது; போலீசார் தீவிர விசாரணை!

வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ₹65 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: 3 பேர் கைது!

ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட  ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – 4 இளைஞர்கள் கைது

இவர்களிடம் இருந்து 6.5 கிராம் மெத்தபெட்டமைன், 7 எல்எஸ்டி ஸ்டாப் ரக போதைப்பொருள், 23 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல்

13 ஆண்டுகள் தலைமறைவு: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டுக் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

நண்பனைக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்: இரண்டு மாதங்களுக்குப் பின் கோவையில் இருவர் சரண்!

கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் தொடரும் மரண தண்டனைகள்: ஒரே நாளில் 8 பேருக்கு நிறைவேற்றம்!

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு நேற்று ஒரேநாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் - நயினார் நாகேந்திரன்!

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை- நாகாலாந்து இளைஞர் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்த நாகாலாந்து இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உ.பியில் அதிர்ச்சி: போதைக்கு அடிமையான மகனை சுட்டுக்கொன்ற தந்தை

உத்தரப்பிரதேசத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு ஜாமின்

மறு உத்தரவு வரும் வரை வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

அரசு பள்ளியில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்.. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

Government school, drunk, teacher who fainted, education department officials, அரசு பள்ளி, மதுபோதை, மயங்கிவிழுந்த ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள்

ஆப்ரேஷன் Melon: ரூ.1 கோடி மதிப்பிலான எல்எஸ்டி, கெட்டமைன், கிரிப்டோகரன்சி பறிமுதல்!

டார்க்நெட் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட “கெட்டாமெல்லன்” என்று அழைக்கப்படும் கும்பலைச் சேர்ந்த கொச்சின் சேர்ந்த எடிசன் பாபு என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. ஆப்ரேஷன் MELON என்ற சோதனை நடவடிக்கையில் 1 கோடிக்கும் அதிக மதிப்புள்ள எல்எஸ்டி, கெட்டமைன் மற்றும் கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடிவேலு பட பாணியில் பள்ளிபாளையத்தில் அரங்கேறிய சம்பவம்…அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

வடிவேலின் சினிமா பட பாணியில் தண்ணீர் லாரியில் இருந்து வந்த தண்ணீரை முட்டுக்கொடுத்து அடைக்கும் ஒரு காட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பள்ளிபாளையத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

கனவா? நிஜமா?.. 6 மாதங்களாக வயிற்றுக்குள் கரண்டியுடன் வாழ்ந்த நபர்..!

சீனாவில் யான் என்ற நபர் மதுபோதையில் 15 செ.மீ நீளமுள்ள கரண்டியை விழுங்கியுள்ளார். 6 மாதங்களாக அது ஒரு கனவு என நினைத்து வந்த நிலையில், வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனை சென்றதால் உண்மை தெரிந்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து தேடிவந்த காவல்துறையினர் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் போதைப்பொருள் பல நாட்களாக உள்ளது - விஜய் ஆண்டனி

சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல, பல நாட்களாகவே பயன்படுத்தப்படுவதாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

"ஒரு நாள் பழக்கத்தால் இந்த நிலைமைக்கு வந்து விட்டேன்"- ‘தீங்கிரை’யால் போதைக்கு இரையான நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்குகளில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் கைது என்ற செய்தியை நாம் பிற மாநிலங்களில் நிகழ்ந்ததாக அடிக்கடி பார்த்து இருப்போம், படித்து இருப்போம். ஆனால் முதல் முறையாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைதான செய்தி வைரலாகி உள்ளது. தமிழ் திரை உலகில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக பலரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

போதைப்பொருள் வழக்கு – அதிமுக முன்னாள் நிர்வாகியை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் ஸ்ரீகாந்தால் சிக்கும் பிரபலங்கள்...போதைப்பொருள் பயன்படுத்தியது யார் என போலீஸ் விசாரணை

கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. போலீசார் தீவிர விசாரணை!

சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போதை மருந்து விற்பனை.. பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் கைது!

கோவையில் போதை மருந்து விற்பனை செய்த பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.