K U M U D A M   N E W S

அதிமுக கள ஆய்வுக்குழு ஆலோசனை.. யாரெல்லாம் பங்கேற்றுள்ளார்கள்?

அதிமுக கள ஆய்வுக்குழுவினருடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் 6 பெண்கள் உட்பட 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உரத் தட்டுப்பாட்டால் வாடும் உழவர்கள்... அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரம் - அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

‘ராமேஸ்வரம் கஃபே’ குண்டுவெடிப்பு விவகாரம்.. வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக திட்டம் தீட்ட உதவிய பைசல் என்பவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இபிஎஸ் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன பதில்

நீர்வளத் துறை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தடம் மாறும் ராமதாஸ்.. சர்ச்சையை கிளப்பிய அந்த ஒரு ட்விட்! கூட்டணியில் விரிசல்?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தேர்தல் முடிந்த ஆறே மாதத்தில் பாமக – பாஜக கூட்டணியில் விரிசல் பேச்சு அடிபடுவது தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விடிந்ததும் பூகம்பத்தை கிளப்பும் இபிஎஸ் - பேரதிர்ச்சியில் திமுகவினர்

மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

டென்ஷன் எங்களுக்கு இல்லை; அவர்களுக்கு தான் - அமைச்சர் சேகர் பாபு பதிலடி

தாமரை எங்காவது மலர்ந்தால் தானே நான் டென்ஷனாக வேண்டும் என்றும் பாஜகவை கூண்டோடு ஏறகட்டிவிட்ட பின்னர் நாங்கள் ஏன் டென்ஷன் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.