தொடரும் லாக்கப் டெத் - EPS கண்டனம்
திருச்சி மத்திய சிறையில் திராவிட மணி என்பவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி மத்திய சிறையில் திராவிட மணி என்பவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில், இது மிரட்டல் புரளி என தெரியவந்தது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 50% நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - அண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இளம் நடிகை ஒருவர் நடிகர் சிக்கிக் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 300வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அசத்தல்
சென்னை அசோக் நகரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து ஐயப்பன் என்பவர் உயிரிழந்ததற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நாகை கோடியக்கரை அருகே பைபர் படகு மீது விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து செருதூர் பகுதி மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.