K U M U D A M   N E W S

சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

டெல்லி சாமியார் பாலியல் சீண்டல்: "என் அறைக்கு வா, உன்னை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறேன்!"

சாமியார் சைதன்யானந்தா பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழே மாதங்களில் 7 போர்களை நிறுத்தினேன் - ஐ.நா.வில் டிரம்ப் பகிரங்க அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கான், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் – மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது

பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்

“சிலர் எழுதிக்கொடுப்பதை தவறாக பேசுகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி

தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஏழை மக்களுக்கு நற்செய்தி: உஜ்வாலா திட்டம்: 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு: கோவை வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி! நேரில் ஆய்வு செய்த வானதி சீனிவாசன்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.