தண்ணீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி.. புதுமனை புகுவிழாவில் நடந்த சோகம்
நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
நெல்லை அருகே நண்பனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்ற, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் வெள்ளநீர் கால்வாயில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. அஜீஸ் நகர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி
முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளதால் கூட்ட நெரிசல் - பாதுகாப்பு பணியில் போலீசார்
பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்காக கொண்டு வரப்படும். இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 15-09-2024
‘ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்று திருமாவளவன் பேசும் வீடியோ, ட்விட்டர் பக்கத்தில் 3ஆவது முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.