K U M U D A M   N E W S

கனமழை

செயலில் ஒன்றுமில்லை.. விளம்பரம் தான் அதிகமா இருக்கு.. தமிழிசை சவுந்தரராஜன்

மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தடையின்றி பால் விநியோகம்... ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.

மழை எதிரொலி.. சென்னையில் நேற்று ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை!

சென்னையில் நேற்று 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்த பாதிப்பும் இன்றி கூடுதல் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொட்டிய மழை.. தேங்கிய மழைநீர்.. துரித நடவடிக்கை எடுத்த மாநகராட்சி

சென்னையில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 பகுதிகளில் அகற்றப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 103 இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

கொட்டித் தீர்த்த கனமழை.. தொடரும் மீட்பு பணி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர் கனமழை எதிரொலி... சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.

ஓய்ந்தது மழை... களத்தில் அதிதீவிரமாக இறங்கிய தூய்மைப் பணியாளர்கள்

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தூய்மைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைநீருடன் அடித்து வரப்பட்ட குப்பைகள், மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்...7.18 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கிய அரசு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

கனமழை எதிரொலி... தத்தளிக்கும் பெங்களூரு

தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.