வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
வீடுத்தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி முக்கிய அப்டேட் ஒன்றினை தந்துள்ளார்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஆய்வு செய்து தமிழகத்திலும் வீடுகளுக்கே நேரடியாக ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, ”ஏழை எளிய மக்கள் அதிகாலை பணிக்கு சென்று இரவு நேரத்தில் வீடு திரும்புவதால் நியாய விலைக்கடைகளில் பொருட்களை பெற முடியவில்லை என்பதால் நாகர்கோவில் தொகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைக்க அரசு முன்வருமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாகர்கோயிலில் ஏற்கனவே 31 நியாய விலைக்கடைகளும், 10 பகுதிநேரக் கடைகளும் இயங்கி வருவதால் நடமாடும் நியாயவிலைக்கடைகள் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என பதிலளித்தார்.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்:
தொடர்ந்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கர்நாடக மாநிலத்தில் எப்போது வேண்டுமானலும் ரேசன் பொருட்கள் பெறும் வகையில் திட்டம் இருக்கும் நிலையில், அதைப் போலவே தமிழகத்திலும் செயல்படுத்த அரசு முன்வருமா? எனவும் கேள்வி எழுப்பினார். செங்கோட்டையனுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் வீடுகளுக்கு நேரடியாக ரேசன் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் குறித்து வரும் 20 ஆம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் பார்வையிட இருப்பதாகவும், அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
Read more: மாதம் 90 லட்சம்.. குடும்பத்தோடு தற்கொலை செய்த டாக்டர்- போனில் மிரட்டியது யார்?
What's Your Reaction?






