அண்ணாமலை கத்துக்குட்டி.. அரைவேக்காடு அரசியல்வாதி.. செல்லூர் ராஜூ பாய்ச்சல்

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று மீண்டும் நிரூபித்துள்ளார் என்றும் அவர் ஒரு அரைவேக்கட்டுத்தனமான அரசியல்வாதி என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Aug 21, 2024 - 14:57
 0
அண்ணாமலை கத்துக்குட்டி.. அரைவேக்காடு அரசியல்வாதி.. செல்லூர் ராஜூ பாய்ச்சல்
Sellur raju vs Annamalai

கருணாநிதியின் நூறு ரூபாய் நாணயத்தை திமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி வரும் நிலையில் மூன்று ஆண்டுகளில் திமுகவினர் நன்கு சம்பாதித்து விட்டார்கள் நூறு ரூபாய் நாணயத்தை இன்றைக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. 100 ரூபாய் நாணயத்தை திமுகவினர் 50லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர் என்றும் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

திராவிட தலைவர்களை அவதூறாக பேசியவர் அண்ணாமலை குறிப்பா திமுக தலைவர்களை.! அப்படி பேசிய அண்ணாமலை இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவில் நூறு ரூபாய் நாணய வெளியிட்டு விழாவில் முதல்வர் கைபேசியில் அழைத்தவுடன் ஓடி சென்று பங்கேற்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம்  பேசிய செல்லூர் ராஜூ,மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உண்ணாவிரத போராட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், கள்ளர் சீர் அமைப்பு மற்றும் பள்ளிகள், விடுதிகள் ஆகிய கள்ளர் சீரமைப்புதுறையை மூடும் தமிழக அரசின் போக்கை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது அது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனை நேரில் சந்தித்து நானும் ராஜன் செல்லப்பா மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கள்ளர் சீரமைப்பு மூடு விழா காணுவதாக தகவல் வந்துள்ளது என கேட்டதற்கு அது வீண் புரளி என்றும், இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் கூறினார்கள். ஆனால் இன்றைக்கு இந்த அரசு மோசமான நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது.

அண்ணாமலையை பற்றி நான் பேசவா..? நான் பேசினா தப்பா போடுவீங்க.? பாக்ஸ் போட்டு மீம்ஸ் போடுவீங்க என்று சொன்ன செல்லூர் ராஜூ, அண்ணாமலையை படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டினார்கள் திமுகவினர்.! திமுகவின் தலைவர்களை எல்லாம் அவதூறாக பேசியவர் அண்ணாமலை.!

திராவிட தலைவர்களை அவதூறாக பேசியவர் அண்ணாமலை குறிப்பா திமுக தலைவர்களை.! அப்படி பேசிய அண்ணாமலை இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவில் நூறு ரூபாய் நாணய வெளியிட்டு விழாவில் முதல்வர் கைபேசியில் அழைத்தவுடன் ஓடி சென்று பங்கேற்கிறார்.

இந்தியாவுக்கு வழிகாட்டி என கலைஞரை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசுகிறார்.இதற்கு முன்பு மோடி தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வந்த போது புரட்சித் தலைவி அம்மாவை புகழ்ந்தார்.திராவிட ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்றதாக பேசிய அண்ணாமலை இன்றைக்கு ஆடு தலை வெட்டியது போல "அண்ணாமலை மாட்டிக் கொண்டார்."

தலைவர்களின் நாணயங்களை மத்திய அரசின் சார்பில் யாரு வேண்டுமானாலும் வெளியிடலாம். MGR 100 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நாணயம், தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. புரட்சி தலைவர் MGR சாதி சமயத்திற்கு அப்பார்பட்டவர் அனைவருக்குமான தலைவர் என்பதால் நாங்கள் பாஜகவை அழைக்கவில்லை என பொது செயலாளர் கூறியுள்ளார்.

இந்த விழா மாநில அரசு நடத்திய விழா என எல்.முருகன் தெளிவாக கூறிவிட்டார். ஆனால்,  இதை மத்திய அரசு நடத்திய விழா என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ED ரெய்டு, பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்திய அரசை சரிகட்டுவதற்காக தமிழக அரசும் முதல்வர் ஸ்டாலினும் இன்றைக்கு முயற்சிக்கிறார். 

இன்றைக்கு பாஜக மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது அவர்களால் எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாது.! அனைத்து கட்சியும் எதிர்க்கிறது. திமுகவின் ஆதரவு பாஜகவிற்கு தேவை என்பதால் மத்திய அரசும் திமுக அரசும் இணக்கமாக உள்ளது. திமுகவிற்கு பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ உடனே யார் மத்திய அரசு ஆளுகிறதோ அதற்கு இணக்கமாக சொல்வார்கள்.

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க தமிழக அரசால் நடத்தப்படுவதாக சிவதாஸ் மீனா மற்றும் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். மூன்று ஆண்டுகளில் திமுகவினர் நன்கு சம்பாதித்து விட்டார்கள் நூறு ரூபாய் நாணயத்தை இன்றைக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர். 100 ரூபாய் நாணயத்தை திமுகவினர் 50லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்று மீண்டும் நிரூபித்துள்ளார் ஒரு அரைவேக்கட்டுத்தனமான அரசியல்வாதி. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா பாஜகவினரை அழைத்து நடத்த வேண்டிய காரணம் என்ன என எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருக்கிறார். இதில் என்ன அரசியல் உள்நோக்கம் உள்ளது.?

மக்களுக்கு இன்றைக்கு திமுகவினர் வறுமையில் வரி விதித்து விலையை உயர்த்தி இருக்கிறது. இன்றைக்கு போக்குவரத்து துறை பேருந்துகள் எல்லாம் தள்ளு மாடல் பேருந்தாகவும் கயிலான் கடைக்கு போடவேண்டிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்றும்.இந்த அரசு விளம்பர அரசாக மக்கள் பணி பணத்தை வீண் விரயம் செய்கிறது என்றும் குற்றம் சாட்டினார். 

இந்த அண்ணாமலை கலைஞரைப் பற்றி எவ்வளவு அவதூறாக பேசியிருக்கிறார் ஆனால் இன்றைக்கு திமுகவிடமிருந்து அழைப்பு வந்துவிட்டால் கூப்பிட்டவுடன் ஓடுகிறார்.பாரதிய ஜனதா கட்சியில் அகில இந்திய தலைமை தான் நாளைக்கே அண்ணாமலையை தேசிய தலைமை அவரை மாநில பொறுப்பில் இருந்து இறக்கி விடலாம். இவர் சொல்லி தான் கூட்டணி வைப்பார்களா என்ன.!

திமுகவினரை எதிர்த்தால் அவர்கள் மீது கொடூரமாக நடந்து கொள்ளும். இன்னும் அரசியல் கட்சி தொடங்கவில்லை அதற்குள் விஜய்யை திமுக அரசு தடுக்கிறது. இந்திய ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். விஜய்யின் அரசியல் கட்சி தொடங்குவதை தடுக்கும் திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு திமுக தோழமைக் கட்சிகள் வாய்மொழி மௌனமாக இருக்கிறது. திமுக அரசிற்கு தோழமைக் கட்சிகள் ஊது குழலாக உள்ளது. ஏற்கனவே முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை அவர் நல்லா தூங்க வேண்டும் முதலமைச்சர் பணியை நன்கு செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் ஏற்கனவே திமுகவினரால் அவருக்கு தூக்கம் கெட்டுள்ளது என்றும் குத்தலாக பேசினார் செல்லூர் ராஜூ. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow