Rapido ஓட்டுநரை மிரட்டி வழிப்பறி.. சிறப்பு உதவி ஆய்வாளரின் செயலால் வேதனை

Rapido Driver Robbed By Police at Chennai : வேலியே பயிரை மேய்ந்தது போல சிறப்பு உதவி ஆய்வாளர் மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட ரேபிடோ ஓட்டுனர் வேதனை தெரிவித்துள்ளார்.

Sep 24, 2024 - 07:04
Sep 24, 2024 - 12:23
 0
Rapido ஓட்டுநரை மிரட்டி வழிப்பறி.. சிறப்பு உதவி ஆய்வாளரின் செயலால் வேதனை
ரேபிடோ ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த போலீஸார்

Rapido Driver Robbed By Police at Chennai : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது அமித், சாலிகிராமத்தில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  குறைந்த அளவிலான வருமானம் கிடைப்பதால் பணத் தேவைக்காக இரவு நேரத்தில் கடந்த 1 மாதமாக ரேபிடோ ஓட்டுவதை அகமது வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி அகமது கீழ்பாக்கத்தில் ஒருவரை சவாரி ஏற்றிக்கொண்டு கோயம்பேடு நோக்கி சென்றபோது, நடுவே காவல்துறையினர் அகமதுவின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அகமதுவின் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக்கை காண்பித்த போது, ஆர்.சி. புக் வேறொரு பெயரில் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஆர்.சி. புக் வேறொரு பெயரில் இருப்பதால் திருட்டு வண்டியாக இருக்கக்கூடும் என தெரிவித்து, 3500 ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுவதாக அந்த போலீசார் அகமத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவ்வளவு பணம் இல்லை என அகமது கூறிய நிலையில் 1500 ரூபாய் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துச் செல்லுமாறும் இல்லையென்றால் வண்டி பறிமுதல் செய்யப்படும் எனவும் அகமதை அந்த போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணமும் இல்லை என அகமது கூறிய நிலையில் ஜிபே-வில் இருந்த 300 ரூபாயை அந்த போலீசார் வாங்கிக் கொண்டதாகவும் அகமது வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அகமது, "ரேபிடோ ஓட்டுவதற்காக அரசு ஏலம் மூலமாக 70 ஆயிரம் கொடுத்து வண்டியை வாங்கியதாகவும், ஆனால் திருட்டு வண்டி என போலீசார் தெரிவித்த போது மனம் வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் 3500 ரூபாய் பணத்தை போலீசார் லஞ்சமாக கேட்டதும், தான் கோர்ட்டில் கட்டிக்கொள்கிறேன் ரசீது போடுங்கள் என தான் தெரிவித்ததாகவும், ஆனால் பணம் தரவில்லை என்றால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் மிரட்டியதாகவும் அகமது தெரிவித்துள்ளார்.

பணம் இல்லை என கூறியதற்கு பின்னால் அமர்ந்திருந்த ரைடரிடம் பணம் கொடுங்கள் என கேட்டதாகவும், 300 ரூபாயை எனது ஜிபேவில் இருந்து ரைடரின் அக்கவுண்டிற்கு அனுப்பி அவரிடமிருந்து நவநீதகிருஷ்ணன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பணம் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “அந்த 300 ரூபாய் தான் தன்னுடைய ஒருநாள் ஊதியம். அதனை மிரட்டி அந்த போலீஸ் பறித்து விட்டார். வேலியே பயிரை மேய்ந்தது போல நடந்துள்ளது. வழிப்பறி செய்தது போல அவர் செய்துள்ளார். ரேபடோ ஓட்டும் போது குறைவாகதான் ஊதியம் கிடைக்கும் என்று கூறியபோது கூட அந்த போலீஸ் விடாமல் மிரட்டி பணத்தை பறித்து விட்டார்" என்று வேதனையோடு அகமது தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow