Devanathan Arrest : கோடிக்கணக்கில் நிதி மோசடி.. தனியார் தொலைக்காட்சி நிறுவனர் தேவநாதன் கைது..

Private TV Founder Devanathan Arrest : கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனருமான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Aug 13, 2024 - 14:45
Aug 14, 2024 - 10:00
 0
Devanathan Arrest : கோடிக்கணக்கில் நிதி மோசடி.. தனியார் தொலைக்காட்சி நிறுவனர் தேவநாதன் கைது..
நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது

Private TV Founder Devanathan Arrest : சென்னை, மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனருமான தேவநாதன் யாதவ் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.

இதை படித்தீர்களா..: பெண்ணின் மார்பகத்தில் முருகன் டாட்டூ.. அல்லோலகல்லோலப்பட்ட சமூக வலைதளம்..

இதனிடையே , இந்த நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி காணவில்லையாம். டெபாசிட் செய்தவர்களெல்லாம் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்றும், ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் இருக்கிறது என்றும்’ காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சியில் தேவநாதன் யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி புகாரில் தேவநாதன் கைது செய்யப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow