K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

இழந்த 10% வாக்குகளை மீட்க வேண்டும்... ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் வலியுறுத்தல்

10% வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இழந்த வாக்குகளை மீட்கும் வகையில் செயல்பட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் 

நடிகை வனிதாவுக்கு மீண்டும் "டும் டும் டும்"

நடிகை வனிதாவுக்கு நடன இயக்குநர் ராபர்ட் உடன் அக்டோபர் 5ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்கு 95 ரன்கள் டார்கெட்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அலட்சியம்.. பறிபோன உயிர்? போராட்டத்தில் இறங்கிய பாமகவினர்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வலிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் ரமேஷ் உயிரிழந்ததாக பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடகை பைக்குகளுக்கு செக்... ஆட்டோ ஓட்டுனர்கள் அதிரடி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். 

செவி சாய்க்காத சாம்சங் நிறுவனம்.. சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

துணை முதலமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து வடிவேலு வாழ்த்து

மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

கோவை ஈஷா யோகா மையத்தில் பரபரப்பு.. போலீசார் அதிரடி ஆய்வு..

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக காமராஜ் என்பவர் செனனி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷாவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.. குற்றப்பத்திரிகை நகல் வழங்கிய நீதிமன்றம்

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.

திடீரென இடிந்து விழுந்த சுவர்... தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள வணிக வளாகத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.