கொட்டி தீர்த்த கனமழை.. தேங்கிய மழைநீர்.. பொதுமக்கள் அவதி
கனமழையில் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கனமழையில் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை பெய்து வருவதால் பயணிகளின் வரத்து குறைவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளது - T. M. Anbarasan
வெறும் அறிக்கையை வைத்து கொண்டு பேரிடரை எதிர்கொள்ள முடியாது - RB Udhayakumar Speech
சென்னையில் தொடரும் கனமழையால் தரமணியில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது
கனமழை காரணமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்தி சேவைகளும் செல்ல முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு
தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு
சென்னை தியாகராய நகர் பர்கித் சாலையில் கனமழையால் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 250 கனஅடியில் இருந்து 260 கனஅடியாக உயர்வு