K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கண் தானம்? - சுகாதாரத்துறை விளக்கம்

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளே அங்க மட்டும் போகாதீங்க..! - வனத்துறை விதித்த அதிரடி தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

ரூ.1.47 கோடி பண மோசடி - காவலர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

முழு கொள்ளளவை எட்டிய கோமுகி அணை.. மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியதால் 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

"இதுவரை காணாத உச்சம்" அதிகரித்த தங்கம் விலை..

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.112க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடங்களில் சோதனை.. குவியும் தொண்டர்கள்

இபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் - மக்களே முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் ஏலம் நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"போச்சு.. நாசமா போச்சு.." வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. என்ன நடக்கிறது கோவையில்..?

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.

#BREAKING || எதிர்பார்க்காத திடீர் என்ட்ரி.. முக்கியமான இடத்தை தொட்ட ED - தஞ்சாவூரில் பரபரப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, ஒரத்தநாடு வீடு, கோடம்பாக்கம் தனியார் கட்டுமான நிறுவனம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7