Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil
01 மணி தலைப்புச் செய்திகள்
01 மணி தலைப்புச் செய்திகள்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என இளைஞர் புகார்.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.
சாலை சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கணவன், மனைவி மற்றும் குழந்தை படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
பொது நன்மை எனக்கூறி மாநில அரசுகள் அனைத்து தனியார் சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 8க்கு ஒன்று என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் உத்தரவு என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் ரக்ஷிதா என்பவர் வீட்டில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
சென்னை ஜெ.ஜெ.நகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, 100 எல்எஸ்டி ஸ்டாம்புகள், வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.