K U M U D A M   N E W S

அரசு பள்ளியில் ஆன்மிகம் போதிக்க வேண்டிய அவசியம் என்ன? - அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிய சீமான்

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது கூட தெரியாமல், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது 

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

மருத்துவ மாணவி கொலை: தாமதமாக வந்த சிபிஐ வழக்கறிஞர்.. கடும் கோபமடைந்த நீதிபதி!

''சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்து 24 நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? என்று நாட்டு மக்கள் கேட்கின்றனர். சிபிஐ நடந்து கொள்வதை பார்த்தால் இந்த வழக்கில் சீரியஸாக செயல்படவில்லை என்பது தெரிகிறது'' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

20 லட்சம் ரூபாய் நோட்டுகள்.. பண மாலையில் ஜொலித்த விநாயகர்

விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விநாயகர் கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் விநாயகருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகளால்  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் ஓய்வு?.. வைரலான பதிவால் பரபரப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்.. 48 மணி நேரத்தில் 61 பேர் உயிரிழப்பு!

போர் விதிமுறைகளை மீறி மருத்துவமனைகள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சர்ச்சை பேச்சில் சிக்கிய மகா விஷ்ணு விமான நிலையத்தில் கைது.. ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

அரசு பள்ளிகளில் சர்ச்சை பேச்சு.. சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்தனர்.

சிலை செய்ய முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் முடிந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

பண்ருட்டி அருகே  விநாயகர் சிலை செய்வதற்காக களிமண் எடுக்க  சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'நான் அப்பவே சொன்னேன்.. எல்லாம் நாடகம்'.. வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தது குறித்து பிரிஜ் பூஷன்!

''ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப்பிரிவு போட்டிகளில் பங்கேற்றது எப்படி என்பது குறித்து வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் மல்யுத்த போட்டிகளில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றி பைனல் வரை சென்று விட்டீர்கள். அதற்காகத்தான் கடவுள் உங்களை தண்டித்தார்'' என்று பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.