K U M U D A M   N E W S

குருபகவானின் ஆதிக்கம் மிக்க வியாழக்கிழமையில் பிறந்தவரா நீங்கள்? பலன் விவரங்கள்

இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.

ஜூன் 13 முதல் OTT-யில் வெளியாகிறது சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்!

ZEE5 , அதிரடி வெற்றித் திரைப்படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையில் நனையும் நெல் மூட்டைகள்.. அரசுக்கு கோரிக்கை!

விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கடலில் மூழ்கிய எல்சா 3 சரக்கு கப்பல்: உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு!

எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இனி ஆதார் கட்டாயம்.. ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

IRCTC கணக்குடன் கட்டாயம் ஆதாரை இணைக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரள கடலில் தீப்பிடித்த சிங்கப்பூர் கப்பல்.. வெடித்துச்சிதறும் அபாயம்..!

கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் வான்ஹாய் 503 என்ற சரக்குக் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

TNPL: முன்னாள் CSK வீரர் பத்ரிநாத்தை கிண்டல் செய்த RCB ரசிகர்! வைரலாகும் வீடியோ

ஆர்சிபி ரசிகர் ஒருவர் TNPL போட்டியினை வர்ணணை செய்ய வருகைத் தந்த பத்ரிநாத்தை நோக்கி கிண்டலடித்தார். அதுத்தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூகுள் ஆண்ட்ராய்டு.. அட்டகாசமான 6 புதிய அம்சங்கள் வெளியீடு

கூகுள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-

AUS vs SA : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங் தேர்வு..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தேனி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்திற்கு மண்டல அளவிலான தேசிய விருது!

தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற தேசிய வேளாண் அறிவியல் கழகத்தின் வேளாண் விருது வழங்கும் நிகழ்வில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ரூ.25-க்கு உணவு டெலிவரி.. ரேபிடோவின் அதிரடி திட்டம்!

பைக் டாக்ஸி மூலம் பிரபலமான ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி சேவையிலும் தன் கால் தடத்தை பதிக்கவுள்ளது. இம்மாத இறுதியில் பெங்களூருவில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Suriya 46: வெளியான புதிய அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

திமுக கூட்டணி: கூடுதல் தொகுதி கேட்பது நியாயமான விருப்பம்.. சண்முகம் பேட்டி

"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.

துளசியாக சீரியலில் ரீ-என்ட்ரி தரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

11 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான பள்ளி மாணவர்கள்

காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை 3 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசி யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு கொண்டு வரும் புது ரூல்ஸ்

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மன்னிப்பு கோரியும் பயனில்லை.. ஓட்டுநரை தாக்கிய மேலாளர் மீது வழக்கு

அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் தாக்கிய விவகாரத்தில் உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மன்னிச்சிடுங்க தலைவரே.. அமைச்சருக்கு பணமாலை: மன்னிப்பு கேட்ட தவெக மா.செ.!

த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையினை கிளப்பிய நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்.

கள் மதுவே தவிர.. உணவில்லை: கள் இறக்கும் போராட்டத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

18 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

18 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2-வது மாடியிலிருந்து குழந்தையை வீசிக் கொன்ற கொடூரம்.. தாய் கைது

இரட்டை பெண் குழந்தைகளின் அழுகையால் தூக்கமின்றி தவித்த தாய் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டின் 2வது மாடியில் இருந்து ஒரு குழந்தையை வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கணவர் போட்ட ஸ்கெட்ச்.. மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து கூலிப்படையை ஏவிவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார்.. மருமகள் அதிர்ச்சி

வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய மாமியார் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.