IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் அசத்தல்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
ஏர் இந்தியாவின் சிங்கப்பூர் விமானம், இண்டிகோவின் ஜெய்ப்பூர் விமானம், ஆகாஷாவின் பெங்களூர் விமானம், ஆகிய விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்களுக்கு டார்க் நெட் எனப்படும் முகவரி இல்லாமல் வரும் இணையதள மிரட்டல் தகவல் வந்ததால், சென்னை விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது. தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திராவிட மாடல் அரசு, கல்விக்கு செய்தது என்ன என கேட்பவர்களுக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை தவெக தலைவர் விஜய் ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்குப்பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை ஆளுநரை சந்தித்து பாஜக செயலாளர் அஸ்வத்தமன் வழங்கினார்.
மும்பை - கோவை விஸ்தாரா விமானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடசேமபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மழை நீரை உடனடியாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.