K U M U D A M   N E W S

உரத்திற்கு பதில் களிமண்... வைரலான வீடியோவால் விவசாயிகள் அதிர்ச்சி

கடலூரில் போராட்டம் நடத்தியும் போலி உரங்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். போலி உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் போலி உரங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த கையில பட்டம்... அந்தக் கையில மனு.... ஆளுநரையே அதிரவைத்த மாணவரால் பரபரப்பு!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கிக்கொண்டிருந்த ஆளுநரின் கையில் மாணவர் ஒருவர் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cool Suresh: மஞ்சள் வீரன் ஹீரோ... TTF வாசனை தூக்கி அடித்த கூல் சுரேஷ்... அலப்பறையாக வந்த அப்டேட்!

சோஷியல் மீடியா பிரபலமாக வலம் வந்த கூல் சுரேஷ், இப்போது ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகை சித்ரா வழக்கில் புதிய திருப்பம்.. ஹேம்நாத்துக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

திருச்செந்தூர் கோயிலில் தங்கும் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.68.36 கோடியில் ரூ.68.36 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளி கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(அக்.14) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

ரயில் விபத்து.. விசாரணைக்காக 4 பேர் ஆஜர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பொன்னேரி ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட 4 பேரிடம் சென்ட்ரல் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை... ஆவின் நிர்வாகம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பால் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க ஆவின் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் 9,000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய சாம்சங் நிறுவன ஊழியர்கள்

தொடர் விடுமுறைக்கு பின்னர் சாம்சங் நிறுவன ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுங்குவார்சத்திரத்தில் ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீ தொலைவில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ரெட் அலர்ட்.. சென்னை விரையும் பேரிடர் மீட்பு படை

சென்னைக்கு வரும் 16ம் தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை சென்னை விரைகிறது.

மழை முன்னெச்சரிக்கை... தீயணைப்பு துறையினருக்கு பறந்த முக்கிய உத்தரவு

மழைக்கால மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத் துறை அனைத்து வீரர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

“சென்னை மழை... இது டீசர் தான்... நவம்பரில் சம்பவம் இருக்கு..” தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ்க்ளூசிவ்!

வரக்கூடிய அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில், நவம்பரில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். குமுதம் சேனலுக்காக தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ள பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.

வடகிழக்கு பருவமழை.. கண்காணிப்பாளர்கள் நியமனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையின் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்... பதற்றத்தில் பெற்றோர்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தம்பி விஜய் உணர்ந்திருப்பார்னு நினைக்கிறேன்! தமிழசை செளந்தரராஜன் விமர்சனம்

2026 தேர்தலின்போது திமுக கூட்டனி ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளு வெளுத்து போகும் என முன்னாள் ஆளுநர் தமிழசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு ரெட் அலர்ட்.. முதலமைச்சர் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

திடீரென வெடித்த டயர்.. லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து.. மாணவர்களின் நிலை?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Vettaiyan Box Office: வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செம!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. முதல் நான்கு நாட்களில் வேட்டையன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னைக்கு ரெட் அலெர்ட்... மீட்புப் படைகள் தயார் என அறிவிப்பு!

சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென பழுதான பேருந்து.. வனப்பகுதியில் சிக்கிய பயணிகள்

ஈரோடு மாவட்டம் கல்லாம்பாளையம் அருகே வனப்பகுதியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து பழுதாகி நின்றது. இதனால் சிறிது நேரம் பயணிகள் செய்வது அறியாமல் தவித்தனர். பின்னர் சில பயணிகள் அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் ஏறி சென்றனர்.

Womens T20 World Cup: டி20 உலகக் கோப்பை... ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியில், இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

Mumbai To Newyork... பாதியில் தரையிறக்கப்பட்ட விமானம் காரணம் என்ன?

மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

செக் வைக்க காத்திருக்கும் மழை.. சென்னைக்கு படையெடுத்த டிராக்டர்கள்

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் தேங்கினால் நீர் உறிஞ்சும் மோட்டார் பொருத்திய டிராக்டர்கள் மூலம் நீரை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் சென்னைக்கு வரவுள்ளன.

சென்னை என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

வெள்ளத்தில் மிதக்கிறது மதுரை மற்றும் கோவை. அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.