2025 புத்தாண்டு ராசி பலன்.. ஏழரை ஆட்டம் ஆரம்பம்.. மேஷ ராசிக்கு எப்படி இருக்கு?
Puthandu Rasipalan 2025 : 2025ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு இன்னும் 3 மாதங்களில் பிறக்கப்போகிறது. புத்தாண்டில் நமக்கு எப்படி இருக்கும் நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் நடக்குமா என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டு என்ன பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
Puthandu Rasipalan 2025 : 2025ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு இன்னும் 3 மாதங்களில் பிறக்கப்போகிறது. புத்தாண்டில்(New Year Rasi Palan) நமக்கு எப்படி இருக்கும் நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் நடக்குமா என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டு என்ன பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 மார்ச்(New Year Mesham Rasipalan) மாதம் ஏழரை சனி ஆரம்பமாகிறது. ராகு 11ஆம் வீட்டிலும் கேது 5ஆம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகின்றனர். குரு 3ஆம் வீட்டிற்கு செல்வார்.சனி, ராகு கேது குரு பகவான் பயணத்தால் அற்புதங்கள் நிகழப்போகிறது.மேஷ ராசியில் முதல் சுற்று சனி ஏழரை சனியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு கவனமும் ஜாக்கிரதையும் தேவை. வேலை, ஆரோக்கியம், திருமணம் போன்ற விசயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டும். சோதனைகள் அதிகமாக இருக்கும். உங்களை புடம் போட்ட தங்கமாக மாற்றுவார் சனிபகவான். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். கல்வி, வேலையில் சிறப்பாக இருக்கும். உழைப்பாளிகளுக்கு சனிபகவான் எந்த பிரச்சினைகளையும் கொடுக்க மாட்டார்.
விரைய சனிபகவான் அலைச்சலை கொடுக்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். எல்லாம் நன்மைக்கே என்று புரிந்து கொள்வீர்கள். எதையும் அலட்சியமாக எதிர்கொள்ளாதீர்கள். பொறுப்புணர்வோடு இருங்கள். தெளிவான சிந்தனையோடு இருங்கள். குடும்ப வாழ்க்கையில் வரும் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். அன்பும் பாசமும் அதிகரிக்கும். வெற்றிகளை பெறலாம்.
சனி பகவான் தரும் சந்தோஷம்:
இரண்டாவது சுற்றில் ஏழரை சனியை சந்திப்பீர்கள். பொங்குசனி மேஷத்திற்கு ஏழரை சனி வளர்ச்சியையும் வெற்றியையும் கொடுக்கும். ராகுவும் குருவும் கைகொடுப்பார்கள். வேகமாக இருப்பதை விட விவேகமாக இருங்கள். திருமணம் சுப காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். பணம் பலவழிகளில் இருந்தும் வரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குருபகவான் அற்புதமான பலன்களை தருவார்.
ஏழரை சனி மூன்றாம் சுற்றில் இருப்பவர்கள் தங்கு சனி. அனுபவம் தெய்வ அருள் பெற்றவர்களுக்கு சனிபகவான் சாதிக்க வைப்பார். விரைய சனி உங்களுக்கு அதிக நன்மைகளை தருவார். வாழ்க்கையை பற்றிய புரிதலையும் ஞானத்தையும் ஏற்படுத்துவார். நிதானமாக வாழ்க்கையை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக கையாளுங்கள். சோதனைகளை எதிர்கொள்ள தயாராகுங்கள்.
கோடி கோடியாக தேடி வரும்:
ராகு கேது பெயர்ச்சி அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. காரணம் ராகு லாப ஸ்தானத்திற்கும் கேது 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் வரப்போகிறார். பணத்தை வருமானத்தை பல வழிகளிலும் அள்ளித்தருவார் ராகு. அதே போல உங்கள் வாழ்க்கையில் பூர்வீக சொத்துக்களை காட்டிக்கொடுப்பார் கேது. பிள்ளைகள் வாழ்க்கையில் பல நன்மைகள் நடைபெறும்.
குரு பகவான் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்திற்கு வரப்போவது சிறப்பு உங்கள் வாழ்க்கையில் இதுநாள்வரை தடை பட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். எத்தனையோ சோதனைகளை எதிர்கொண்ட நீங்கள் சாதனைகளாக மாற்றுவீர்கள். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் பார்வையால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும். நிறைய ஆன்மீக பயணம் செல்வீர்கள். ஆலய தரிசனம் மன அமைதியை ஏற்படுத்தும். லாப ஸ்தானத்தின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கப்போகிறது. 2025ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் ஆதிக்கம் நிறைந்த ஆண்டாக இருப்பதால் ராகு காலத்தில் துர்கா தேவியை வணங்குங்கள். தினசரியும் துர்கா தேவியின் மந்திரத்தை உச்சரிப்பதால் வெற்றிகள் எளிதில் வசமாகும்.
What's Your Reaction?