கொல்கத்தா டாக்டர் கொடூர கொலை..மிகப்பெரிய சதி.. 'அதை' அறுத்து வீசணும்.. நடிகை கஸ்தூரி ஆவேசம்

"ஆணுறுப்பு இருந்தால் மட்டும் அவன் ஆம்பளையாகி விட முடியுமா?" அந்த ஆண் ஒரு பெண்ணை தன்னுடைய இச்சைக்காக கொடூரமாக கொலை செய்து தன்னுடைய இச்சை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிற அந்த ஆணுறுப்பு அவனுக்கு இருக்கவே கூடாது என்று நடிகை கஸ்தூரி ஆவேசமாக கூறியுள்ளார்.

Aug 20, 2024 - 11:28
 0
கொல்கத்தா டாக்டர் கொடூர கொலை..மிகப்பெரிய சதி.. 'அதை' அறுத்து வீசணும்.. நடிகை கஸ்தூரி ஆவேசம்
actress kasturi

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த வாரம் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த கொலையில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும் ஒரு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் நடிகை கஸ்தூரி ஆவேசத்துடன் கூறியுள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி புதன் கிழமை இரவு கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்திய அவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயிரிழந்த பெண் மருத்துவர் குறித்த எந்த தகவலும் வெளியே கசியக்கூடாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை ரகசிய ஆவணமாக கருதி சீல் வைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பத்திரிகைகள் ஊடகங்கள் என யாரும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட எந்த தகவலையும் வெளியிடக்கூடாது என முன்னதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் உடலில் 150 கிராம் ஆணின் விந்தணு இருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அந்தப் பெண் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் பல எலும்புகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. கண்களில் இருந்தும் மூக்கு, வாய் வழியாகவும் ரத்தம் வெளி வந்திருக்கிறது. மார்பகங்களில் பல் தடங்கள் பதிந்து உள்ளன. இதை படிக்கும் பலரையும் பதை பதைக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய கோபத்தை கொட்டி இருக்கிறார். குமுதம் செய்தி இணைய தளத்திற்காக பேட்டி அளித்த நடிகை கஸ்தூரி அந்த பெண் அந்த கடைசி நிமிடத்தில் எவ்வளவு வலியை அனுபவித்திருக்கும்.இந்த கேஸியில் ஒருவன் மட்டும் சம்மந்தபட்டிருக்க முடியாது.சிலருடைய கூட்டு சதியால் இந்த பெண்ணிற்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதை எளிமையாக கடந்து விட முடியாது.பல பேருடைய உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய சந்தோஷங்கள், துக்கங்கள் எல்லாவற்றையும் அந்த பெண் தாங்கிக் கொண்டு மருத்துவம் படித்திருக்கிறது. தொடர்ந்து 36 மணி நேரம் அந்த பெண்ணுக்கு வேலை கொடுக்கப்பட்டு அந்தப் பெண் மருத்துவர் ஓய்வு எடுக்க போன அறையில் இருந்து, இன்னொரு இடத்தில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதையும் தற்கொலை என்றெல்லாம் நாடகம் நடத்தி இருக்கிறார்கள். 

நான் எனக்கு தெரிந்த கொல்கத்தாவில் இருப்பவர்களிடம் சிலரிடம் பேசும்போது அங்கு சில செய்திகள் பரவி வருவதாக சொல்கிறார்கள் அதைக் கேட்கும் போது இன்னும் பயம் அதிகரிக்கிறது. இந்த கேஸியில் ஒருவன் மட்டும் சம்மந்தபட்டிருக்க முடியாது.அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை பல நாட்களாக கண்காணித்து அந்த பெண்ணை இவ்வளவு சித்திரவதை செய்து கொலை செய்து கொடூரமாக கொன்று இருக்கிறார்கள். அந்த மருத்துவமனையில் நடக்கும் ரகசியங்களை கண்டுபிடித்து இருக்கிறார் அந்த பெண் மருத்துவர். அந்த மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து நிதி வருகிறது. அதில் முறைகேடு நடப்பதை இந்த பெண் கண்டுபிடித்து இருக்கிறார். இதை இவர் வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் சிலருடைய கூட்டு சதியால் இந்த பெண்ணிற்கு இந்த நிலைமை ஆகி இருக்கிறது. சிபிஐ அறிக்கையும் அதனைத்தான் கூறியுள்ளது என்று அதிர வைக்கும் தகவல்களை கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி. 

இந்த அளவிற்கு கொடூரம் செய்ய இவர்களுக்கு தைரியம் வருகிறது என்றால் இங்கே கடுமையான தண்டனை இல்லை என்று தானே அர்த்தம். இந்த அளவிற்கு ஒரு பெண்ணை சித்திரவதை செய்வதற்கு ஒரு ஆண் யோசிக்கிறான் என்றால் அவன் ஆணே இல்லை. "ஆணுறுப்பு இருந்தால் மட்டும் அவன் ஆம்பளையாகி விட முடியுமா?" அந்த ஆண் ஒரு பெண்ணை தன்னுடைய இச்சைக்காக கொடூரமாக கொலை செய்து தன்னுடைய இச்சை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிற அந்த ஆணுறுப்பு அவனுக்கு இருக்கவே கூடாது.  "இந்த மாதிரி தப்பு செய்த ஒருவனுக்கு பல பேர் முன்பு அவனுடைய ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும்" அதுதான் இந்த பெண்ணிற்கு கிடைக்கும் நீதியாக இருக்கும். இதனால் பொதுவெளியில் இந்த மாதிரி தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று குமுறியுள்ளார் நடிகை கஸ்தூரி.

தமிழ்நாட்டிலும் பல பெண்களுக்கு இதுபோல நிலைமை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு டாக்டருக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைக்கு பாதுகாப்பில்லை, யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் வகையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow