K U M U D A M   N E W S

Author : Sumalekha M

ரூ.284 கோடி டெண்டர்கள் ரத்து... முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக அரசின் முதல் பட்ஜெட்... அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை!

தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம்... முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை மேற்கு வங்கத்திலும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கில் போட்டியா? மனம் திறந்து பேசிய ஸ்டாலின்..

திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல் முறையாக பதிலளித்த மு.க. ஸ்டாலின், "இன்னும் முடிவு செய்யவில்லை" என தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினி - கமல் கூட்டணியின் ‘தர்மன்’... படக்குழு வெளியிட்ட மாஸ் அப்டேட்!

ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

ஹாட்ரிக் ஹீரோ மெஸ்ஸி; விமர்சன வலையில் ரொனால்டோ!

மெஸ்ஸி ஹாட்ரிக் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எம்பாபே கோல் வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்பெயின் டிராவும் ‘மெர்லின்’ வாத்தும் கவனம் ஈர்த்துள்ளன.

இனி கூட்டணி இல்லை... திமுக தனித்து நிற்கும் ! - ஆ.ராசா

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: 17 பேர் மீது குற்றச்சாட்டு !

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என எஸ்ஐடி முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பள்ளி சீருடைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு?

காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.

மோடியை சந்தித்த அமேசான் சிஇஓ... இந்தியாவில் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு !

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான Amazon நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.