K U M U D A M   N E W S

Author : Sumalekha M

ஆட்சி கவிழ்க சதி: அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்.. தலைமறைவான செ.பா தம்பி?

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை... கூட்டணிக்கு புதிய பெயரா?

முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற தவெக தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அடுத்த கூட்டத்தில் கூட்டணிக்கான புதிய பெயர் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

2,400 டாஸ்மாக் பார்களுக்கு பூட்டு... புதிய டெண்டர் வரை திறக்க முடியாது!

உரிமம் காலாவதியானதால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த 2,400-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

'தேவைப்பட்டால் மீண்டும் தாக்குவோம்!' - ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'சச்சினிடம் ஆலோசனை கேள்... சிறுவயதை அனுபவி!' - வைபவ் சூர்யவன்ஷிக்கு டேரில் கலினன் அறிவுரை

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக காத்திருக்கும் நிலையில், அவருக்கு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் கலினன் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது... டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், இசை நிறுவனமான சரிகமாவுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் காப்புரிமை வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மீண்டும் 'லேஆஃப்'... 2.5% ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

ஏஐ உள்கட்டமைப்புக்கான முதலீடு மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள்!' - தனிச்சட்டம் கொண்டுவர முதல்வர் விஜய்க்கு ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஆளூர் ஷா நவாஸ், நீதிபதி கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!

தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஊழல் செய்தவர்களை தேடித் தேடி தவெகவில் சேர்க்கிறார்கள்!' - தவெக மீது இயக்குநர் அமீர் விமர்சனம் !

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், அந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர்.