K U M U D A M   N E W S

Author : Vasuki

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியவர் முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் என்று அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் காலமானார்..!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

மன்மோகன் சிங்கின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை

FIR லீக் ஆனது எப்படி..? - சென்னை கமிஷனர் அருண் விளக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி ரவுடிகளின் ராஜ்ஜியமாக தான் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு..!

திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ரவுடிகளின் ராஜியமாக தான் உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தத்தெடுக்க விண்ணப்பித்ததால் வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் - அண்ணாமலை சபதம்

தமிழகத்தில் தொடர்ந்து திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சபதம் விடுத்துள்ளார். 

சொன்னபடி செருப்பை கழற்றினார் அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என சூளுரைத்த அண்ணாமலை, பேட்டி முடிந்ததும் செருப்பை கழற்றினார்

தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்த அண்ணாமலை

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அண்ணாமலை புகார்

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுகிறது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் மத்திய மாநில இரு அரசுகளும் மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக அரசு நாடகம் ஆடுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

வன்கொடுமை விவகாரம் - ஞானசேகரனின் வீடியோக்கள்

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

அண்ணா பல்கலை விடுதி மாணவர்களுக்கு கட்டுப்பாடு

அடையாள அட்டை அணியாத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை. விவகாரம் – மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

வாகனங்களில் வருபவர்களை தவிர வேறு யார் வேண்டுமானாலும் வந்து செல்லும் நிலையே இருப்பதாக மாணவர்கள் புகார்

பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே பிள்ளை ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு

பெண்கள் மீது தாக்குதல் – மேலும் இருவர் கைது

கடலூர், புதுச்சத்திரம் அருகே கடற்கரையில் இரு தரப்பினரிடையே தகராறு நடந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது

மாணவி பாலியல் வன்கொடுமை - தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

2025 புத்தாண்டு : சட்டவிரோதமான பைக் ரேஸ்.. போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை..!

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  சட்டவிரோத பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி.. முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? - அண்ணாமலை கேள்வி

“அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஒரு திமுக நிர்வாகி; துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சு உடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?"  என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைக்கு கஞ்சா கடத்தல்.. தஞ்சாவூரில் 128 கிலோ கஞ்சா பறிமுதல்..!

படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த 20 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேர் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

டங்ஸ்டன் விவகாரம்.. திமுக, அதிமுக இருவருமே நாடக காரர்கள் தான் - சீமான் அதிரடி

டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விவகாரத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே நாடக காரர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் - த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளிவந்த உண்மை.. குற்றவாளி கைது ..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார்

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது

Anna University News : மாணவி வன்கொடுமை - ஞானசேகரன் என்பவர் கைது

சென்னை, அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு விவகாரத்தில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்

"கல்லூரி மாணவி வன்கொடுமை.." - நேரம் செல்ல செல்ல அதிகரிக்கும் பதற்றம்.. அமைச்சர் கொடுத்த விளக்கம்

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில், தனிப்பட்ட மாணவி பாதிக்கப்பட்டுள்ளதை அரசியலாக்க வேண்டாம் - கோவி.செழியன்