K U M U D A M   N E W S

Author : Vasuki

முடிவுக்கு வந்த லட்டு விவகாரம் பொய்யை விற்ற களவாணிகள்.. தொழிற்சாலையும் இல்ல..நெய்யும் இல்ல..

திருப்பதி லட்டில் கலப்படம் செய்த சம்பவம் மொத்த இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழக, ஆந்திர, உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர். கைதான இவர்கள் வெறும் பொய்யை மட்டுமே வைத்து திருப்பதிக்கே மொட்டை போட்ட சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

தவெகவின் முதல் பொதுக்குழு? எங்கே? எப்போது? அதிரடி காட்டும் விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் விரைவில் கூட உள்ளதாகவும், அதற்கான இடம் மற்றும் தேதியை தவெக தலைவர் விஜய் குறித்துவிட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தவெக முதல் பொதுக்குழு எப்போது, எங்கே நடக்கிறது? விரிவாக பார்ப்போம் இந்த செய்தி தொகுப்பில்.

செஞ்சி மஸ்தான் IN 4 மா.செக்கள் OUT வெளியான அதிரடி அறிவிப்பு..!

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக-வும் மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்து அதிரடி காட்ட தொடங்கி இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மாற்றம் என்ன பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில். ..

திமுக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக ஜாக்டோ ஜியோ சார்பில் கரூரில் 100-க்கும் மேற்பட்டோர் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதி வளர்ச்சிக்கு எதிரானது - உயர்நீதிமன்றம்

சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"பாஜகவால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே ஆளுநர்" - ஆர்.எஸ்.பாரதி

"பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் ஆளுநர், டெல்லியில் உள்ள உயரதிகாரிகள் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபடுகிறார்"

நான் பார்த்துக்கிறேன்.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அசராமல் பதிலளித்த பவன்கல்யாண்

பழநியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.

"மீன்குழம்பு ரெடி" கணவனை கைப்பக்குவத்தில் தீர்த்துக்கட்டிய மனைவி

கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே மீன்குழம்பில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி

தேர்வு எழுத முடியாத மாணவர்களுடன் தஞ்சை ஆட்சியர் பேச்சுவார்த்தை

பள்ளி தாளாளர், மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பேச்சுவார்த்தை பெற்றோர்களுடன்

எடப்பாடி குறித்த கேள்வி – எஸ்கேப்பான செங்கோட்டையன்

அதிமுகவில், அந்தியூர் தொகுதியில் துரோகிகள் இருக்கின்றனர்

கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரை

கோவை குண்டுவெடிப்பு நினைவு தின அனுசரிப்பு கூட்டம் - பாஜக மாநில அண்ணாமலை உரை

தொடரும் அவலம் – 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போராட்டத்தில் குதித்த உறவினர்கள்

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்

சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு! மைக்கை பார்த்தால் உளறுவார்... திரண்டு வந்த தவெக படை!

விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என விமர்சித்த சீமானை, தவெக நிர்வாகிகள் சுளுக்கெடுத்து வருகின்றனர். சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு என்றும், மைக்கை பார்த்தால் உளறுவது தான் அவரது வழக்கம் எனவும் அடுத்தடுத்து அட்டாக் செய்து வருகின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

காதல் கலப்பு திருமண ஜோடிகளின் காதலர் தின கொண்டாட்டம்

காதல் கலப்பு திருமண ஜோடிகளின் காதலர் தின கொண்டாட்டம்

அண்ணா பல்கலை. விவகாரம் – ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்று வருகிறது

இப்பவே நாடாளுமன்றத் தேர்தல்... அசுர பலத்தில் திமுக, பாஜக! X ஃபேக்டராக உருவெடுக்கும் தவெக?

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், மத்தியிலும், மாநிலங்களிலும் எந்தெந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றிப்பெறும் என சி வோட்டர், இந்தியா டுடே நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தின. அதன் முடிவில், தமிழ்நாட்டில் திமுகவும், மத்தியில் பாஜகவும் அசுர பலத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது....

சோகத்தில் லேடி சூப்பர் ஸ்டார்.. சரிந்த மார்க்கெட் சம்பளம் இவ்வளவு தானா?

மலையாள திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகை நயன்தாராவின் சம்பள விவரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்திய நடிகைகளிலேயே நான் தான் டாப்பு என மார்த்தட்டிக்கொண்டிருந்த நடிகை நயன்தாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

”நீயெல்லாம் புல்லட் ஓட்டுவியா” சாதி வெறியில் அரிவாள் வெட்டு கல்லூரி மாணவன் கவலைக்கிடம்!

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவனின் கைகளை, புல்லட் ஓட்டியதற்காக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வரும் சம்பவம் போல, மானாமதுரையில் நடந்துள்ள கொடூரம் குறித்து, இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

தமிழ்நாட்டுக்கு அடித்த விசிட்.. சனாதன யாத்திரை தொடக்கமா? பவன் கல்யாண் தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கும்பகோணம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பவனின் பக்தி விசிட், சனாதன தர்ம யாத்திரையின் தொடக்கமா என பலர் எண்ணிய நிலையில், பவன் கல்யாண் கூறிய பதில் அனைவரையும் குழப்பியுள்ளது. அப்படி அவர் கூறியது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்., உடைக்கப்பட்ட கதிர்வீச்சு கவசம்.., மக்களின் நிலை?

கதிர்வீச்சை தடுக்கும் வகையில், செர்னோபில் அணுஉலை பாதுகாப்பு கவசம் கொண்டு மூடப்பட்டிருந்தது

"கேள்வி கேட்பவர்களுக்கு மாணவர்கள் பாடம் எடுப்பார்கள்" – அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்

"பல்வேறு மாற்றங்களை கல்வித்துறையில் ஏற்படுத்தியுள்ளோம்"

நாசவேலைக்கு சதித்திட்டம்? சென்னையில் பிடிபட்ட அசாம் தீவிரவாதி

அபுசலாம் அலி சென்னையில் வேறு யாருடனாவது தொடர்பில் இருந்தாரா என தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரணை

மானத்தை வாங்கிய கணவன்... மனதை பறித்த கடன்காரன்... பீஹாரில் ஒரு புதுமைப்பெண்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், ஆங்காங்கே புதுமைப் பெண்கள் செய்யும் புரட்சிகள் பலரையும் திரும்பி பார்க்க வைக்கின்றன. அப்படியொரு சம்பவம் பீஹாரில் நடந்துள்ளது, அதுகுறித்து இப்போது பார்க்கலாம்....

இது காவல்துறைக்கே களங்கம்... பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை? ஆதாரங்களுடன் சிக்கிய ஐபிஎஸ் ஆபிஸர்!

சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார், பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

திருச்செந்தூர் கோயில் விவகாரம் – ”கடமையை சரியா செய்யுங்க” – நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய  வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து