உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. இறைதூதர் இப்ராகிமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழா, ‘ஈத்உல்-அதா’ என்றும் தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
கோவையில் கரும்புக்கடை பகுதியில் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பங்கேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இந்த தொழுகையில் மஸ்ஜித் இஹ்ஷான் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி இஸ்மாயில் இம்தாதி சிறப்பு தொழுகை நடத்தி சொற்பொழிவு நடத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஈக்தா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காலை முதலே புதிய புத்தாடைகளை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு வருகை தந்து இறைவனை மனமுருகியவாறு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் தக்வா ஜமாத் மற்றும் எஸ்டிபிஐ சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமி ஆ மஸ்ஜித் இதுகா மைதானத்தில், இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்ரீத் பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் ஜுகர் அலி தலைமையில் நடைபெற்ற தொழுகையில் பேச்சாளர் ரிஜ்வான் சிறப்புரையாற்றினார். டவுன் கிளை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் வந்தவாசி ஆரணி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 2000-க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள இஸ்லாமியர்கள் பெரியகடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் எனும் முஹயுத்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெரியகடைவீதி, பேருந்துநிலையம் என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று ஜும்மா தொழுகை பள்ளிவாசல் அருகே உள்ள ஈக்தா மைதானத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அமராவதி பாலம் அருகே அமைந்துள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் மதர்சா பாபு தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது ஆண்கள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டனர்.
கோவையில் கரும்புக்கடை பகுதியில் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் இஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பங்கேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இந்த தொழுகையில் மஸ்ஜித் இஹ்ஷான் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி இஸ்மாயில் இம்தாதி சிறப்பு தொழுகை நடத்தி சொற்பொழிவு நடத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஈக்தா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காலை முதலே புதிய புத்தாடைகளை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு வருகை தந்து இறைவனை மனமுருகியவாறு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் தக்வா ஜமாத் மற்றும் எஸ்டிபிஐ சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமி ஆ மஸ்ஜித் இதுகா மைதானத்தில், இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்ரீத் பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் ஜுகர் அலி தலைமையில் நடைபெற்ற தொழுகையில் பேச்சாளர் ரிஜ்வான் சிறப்புரையாற்றினார். டவுன் கிளை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் என ஏராளமானோர் புத்தாடை அணிந்து பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் வந்தவாசி ஆரணி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகையில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 2000-க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள இஸ்லாமியர்கள் பெரியகடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் எனும் முஹயுத்தீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து அங்கிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெரியகடைவீதி, பேருந்துநிலையம் என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று ஜும்மா தொழுகை பள்ளிவாசல் அருகே உள்ள ஈக்தா மைதானத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அமராவதி பாலம் அருகே அமைந்துள்ள திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் மதர்சா பாபு தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது ஆண்கள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டனர்.