குமரியில் வெள்ளப்பெருக்கு - கடைகளை சூழ்ந்த வெள்ளம்
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டிணம் பகுதியில் சீரமைப்பு பணிக்கான கட்டுமானங்களை கடல் அலை இழுத்துச் சென்றது.
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு ஆகிய பகுதிகள் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி அழிக்கால், பிள்ளைத்தோப்பில் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் உடைமைகள் சேதமடைந்தன.
தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்