Kanavu Palangal : மருதாணி சிவக்க சிவக்க.. கை நிறைய மருதாணி கனவில் வருதா?.. டோன்ட் ஒர்ரி.. பீ ஹேப்பி!
Kanavu Palangal of Maruthani Plant in Dreams : உறக்கத்தில் சிலருக்கு அர்த்தமில்லாத குழப்பமான கனவுகள் வரும் சிலருக்கோ மரங்கள், பூக்கள், செடி கொடிகள் கனவில் அடிக்கடி வந்து போகும். கை நிறைய மருதாணி வைத்த மங்கையின் கை கனவில் வருதா? அதற்கு பலன் என்ன என்று கனவு சாஸ்திரம் சொல்வதை பார்க்கலாம்.
Kanavu Palangal of Maruthani Plant in Dreams : நம்முடைய ஆழ்மனதில் உள்ள எண்ணங்களே கனவுகளாக வெளிப்படும் சிலருக்கு வீட்டில் தோட்டம் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதுவே சில நேரங்களில் கனவுகளாக வெளிப்படும். கனவில் துளசி, மருதாணி போன்ற தெய்வீக மூலிகைகள் வந்தால் என்ன பலன் மருதாணி அரைத்து பூசுவது போல வந்தால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நல்ல கனவுகள்:
வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்திலோ, வனத்தில் உள்ள மரத்திலோ ஏறுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தம். மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் தனிமையில் நடந்து செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு மிக பெரிய நல்ல விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம்.
பிரச்சினைகள் நீங்கும்:
தோட்டத்தில் செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால் உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும். முட்கள் நிறைந்த செடியில் உங்களின் துணி மாட்டி கொண்டது போல கனவு வந்தால், உங்களின் பிரச்சினைகள் விலகப்போகிறது என்று அர்த்தம். சப்பாத்திக்கள்ளி செடியை வெட்டி அகற்றுவதாக கண்டால் எதிரிகளின் தொல்லை விலகும்.
மலர் கனவுகள்:
பூச்செண்டு ஒன்றை பரிசாக கொடுப்பது போல கனவு வந்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். திருமணமான தம்பதியினருக்கு பூக்கள் பூத்து குலுங்கும் தோட்டத்தில் வாக்கிங் செல்வது போல கனவு வந்தால் குழந்தைபேறு உண்டாகப்போகிறது என்று அர்த்தம். செடி மற்றும் மரத்தில் இருக்கும் பூக்களையோ பழங்களையோ பறிப்பது போல உங்கள் கனவில் கண்டால், நல்ல அறிகுறியாகும். இது சுப கனவுதான்.
திருமணம், குழந்தை பேறு
வீட்டில் வாழைமரம் குலைதள்ளி நிற்பதை கனவில் கண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது என்பதை உணர்த்தும். கனவில் மாமரம் காய்த்திருப்பதை கண்டால் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கி சுப காரியம் நடைபெறப்போவதை உணர்த்துகிறது.
துளசி, மருதாணி
மருதாணியை அரைத்து பூசுவது போல கைகள் சிவந்திருப்பது போல கனவு வரும். இதன் மூலம் நம்முடைய உடலில் இருந்த நீண்ட நாள் நோய்கள் காணாமல் போகப்போகிறது என்று அர்த்தமாகும். துளசி செடிகள் கனவில் வந்தால் பெருமாளின் ஆசியும் குல தெய்வத்தின் ஆசியும் நமக்கு கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
சுப நிகழ்ச்சி கனவுகள்:
பலா மரம் காய்த்திருப்பதை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சனைகள் விலகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்யும் தொழில் மேன்மை அடையும். அரச மரத்தை கனவில் கண்டால் அரசு வேலை தொடர்பான நல்ல செய்தியும் தேடி வரும். கனவில் அத்தி மரம் வந்தால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற போவதை உணர்த்துகிறது.
What's Your Reaction?