K U M U D A M   N E W S

மகனுக்கு முடி சூட்டும் வேலைதான் நடைபெறுகிறது... ஜெயக்குமார் விமர்சனம்!

Jayakumar About Udhayanidhi Stalin : உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வருவதன் வெளிப்பாடாக தான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

A Raja Speech : ஆதவ் அர்ஜுனா குட்டு வைத்த ஆ.ராசா... பெரிதாகும் திமுக கூட்டணி விரிசல்

A Raja Speech About Aadhav Arjuna : ஆதவ் அர்ஜுனா கருத்தை திருமாவளவன் ஏற்க மாட்டார். ஆதவ் அர்ஜுனா மீது திருமா கடுமையான நடவடிக்கை எடுப்பார் என ஆ.ராசா பேச்சு

LIVE : Petrol Bomb : அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Petrol Bomb Thrown In ADMK Secretary House : தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. நள்ளிரவு பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு மர்மநபர்கள் தப்பியோடியதால் பரபரப்பு

"ஊருக்குள்ள எப்படி தலை காட்ட முடியும்" லெப்ட், ரைட் வாங்கிய திமுக கிளை கழக செயலாளர்

Chengalpattu : எம்.எல்.ஏ-வை லெப்ட் ரைட் வாங்கிய கிளை திமுக கழக செயலாளர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

TVK மாநாட்டில் பங்கேற்கும் ராகுல்காந்தி? போட்டுடைத்த ஜெகதீஷ்!

TVK Jagadeesh Exclusive Interview : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெயரளவுக்கு மட்டுமே கடிதம்.. முதலமைச்சரை தாக்கி பேசிய எடப்பாடி பழனிசாமி

மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு

அரசு வேலை வாங்கித்தருவாத கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.. முதல்வரை சாடிய எடப்பாடி பழனிசாமி!

நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த விடியா திமுக முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவைக்கு திமுக செய்த நலத்திட்டங்கள் என்ன..? மேடை போட்டு விவாதிக்க தயாரா..? சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி

 கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார். 

ஒத்தைக்கு ஒத்தை பேசலாம் வாங்க.. திமுகவுக்கு நேரடி அழைப்பு விடுத்த எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி‌.ஆர் இன்னும் 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.  சூலூர் அடுத்த கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார்..

பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ் கருத்து

கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் முடிவு சரியானது... அடுத்து உதயநிதி வந்தால்..... ஜவாஹீருல்லா உற்சாகம்!

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது இளைய தலைமுறையினர் அரசியலில் வருவதற்கும் சாதிப்பதற்கும் வழிவகுக்கும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹீருல்லா கருத்து தெரிவித்துள்ளார்

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று சாதனை.. டீம் இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய செஸ் வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு மாநாடு.. பாராட்ட ஆளில்லை.. திருமாவளவன் வேதனை!

கூட்டணியில் இருந்து கொண்டு மதுவிலக்கு மாநாட்டை நடத்த இருக்கிறாரே என பாராட்ட ஆளில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி கிள்ளுக்கீரை அல்ல... சீமான் பாஜகவின் கைக்கூலி... நாஞ்சில் சம்பத் விமர்சனம்!

உதயநிதியை விமர்சனம் செய்யும் சீமான் பாஜகவின் கைக்கூலி என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மகன், மருமகனுக்கு மட்டும்தான் பதவி.. திமுகவை கடுமையாக சாடிய நிர்மலா சீதாராமன்!

திமுகவில் மகன், மருமகன் உள்ளிட்டோருக்கு மட்டுமே தலைவர் பதவி கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

திமுக கூட்டணியில் புகைச்சல்..எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

திமுக கூட்டணியில் ஆரம்பித்துள்ள புகைச்சல் விரைவில் பற்றி எரியும் என கூட்டணி இல்லை என்றால் திமுக படுதோல்வியை சந்திக்கும் என எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதை... இதுவா திராவிட மாடல் சமூகநீதி? ராமதாஸ் கேள்வி

அனைத்து சாதி அர்ச்சகர்களை அவமரியாதை செய்துள்ள திமுக அரசு, பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ வீட்டில் திருமணம்.. முதல்வருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த துரை வைகோ!

Durai Vaiko Dughter Wedding Invitation To CM Stalin : இயக்கத் தந்தை தலைவர் வைகோவின் உடல் நலன் குறித்து முதல்வர் அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கேட்டு அறிந்தார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்த முதல்வர் அண்ணன் தளபதியின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது குறித்து அவரிடம் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்

மாணவர்களே மறக்காதீர்கள்..!! - வேண்டுகோள் வைத்த இபிஸ்

மாணவர்கள் குறிக்கோள் தவறாமல் கல்வி கற்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திடீர் புளியோதரை போல் திடீர் துணை முதல்வர்... தமிழகத்தில் ரத்த ஆறு... ஆர்.பி உதயகுமார் பேச்சு!

உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

”இதனால் திமுகவின் சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும்” - கடம்பூர் ராஜு கடும் தாக்கு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

’திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் ரெடி’..அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு!

''மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியபோது கூட்டணிக் கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால் வெற்றி பெற்றோம். தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்'' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.