உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு... பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பிசிசிஐ திட்டம்!
மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது
மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது
ஜடேஜா கடந்த 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியில் அறிமுகமானார். 74 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் குவித்துள்ளார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் நமது அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
''பாகிஸ்தான் அரசியலைமைப்பு சிறுபான்மையினர்களுக்கான உரிமையை அளிக்கிறது. சிறுபான்மையினர்களின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்''
முதல் விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் குரலை உயர்த்தி பேச, ஜோ பைடன் மிகவும் தயங்கியபடி பேசினார். பல்வேறு விஷயங்களில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு, அதிபர் பைடன் பதிலடி கொடுக்காதது ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
''தேர்தலுக்கு பிறகு மீண்டும் 'மன் கி பாத்' வாயிலாக பேசுவேன் என கடந்த பிப்ரவரி மாதம் கூறி இருந்தேன். அதன்படி இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன்''
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
125 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 38 அரைசதங்கள் 1 சதத்துடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 48.69 ஆவரேஜ் வைத்துள்ள ஒரே வீரர் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சர்களே மதுப்பழக்கத்தை ஆதரித்து பேசும் சூழல் நிலவுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறித்து ரசிகர் கேட்ட கேள்விற்கு, கமல் டென்ஷனான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் முதன்முறையாக நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்றனர்.
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாலத்தீவில் அதிபர் முகமது மொய்சுவுக்கு, அமைச்சர்கள் பாத்திமா ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஆதம் ரமீஸ் பில்லி சூனியம் வைத்ததாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரத்தினமங்கலம் குபேரபகவானுக்கு நாளை 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை: மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் 603 ரன்கள் குவித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை 4 மாத காலம் வக்ரமடைவார். கும்ப ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு மணிக்கு வக்ர கதியில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே தெரிந்து கொள்வோம்.
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் ராணுவ வீரர்கள் பயிற்சி வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.