K U M U D A M   N E W S

ரூ.5000 கோடி ஊழல் பணத்தில் தொழில் தொடங்கட்டும்.. ராகுல் காந்தி பொறாமைப்படுவது ஏன்? - பாஜக விளாசல்

ANS Prasad on Rahul Gandhi : அதானி, அம்பானியை பார்த்து பொறாமைப்படும் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு ஊழல் பணம் 5000 கோடி ரூபாயில் தொழில் தொடங்கட்டும் என்று ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு... மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

CM Stalin About Caste Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

துரைமுருகன் லூசு போல் பேசுவார்.. திமுக சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொள்கிறது - கரு.நாகராஜன் தாக்கு

Karur Nagarajan Critize Duraimurugan : நிதி ஆயக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஏன் செல்லவில்லை? சின்ன பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல மாட்டேன் என்பது போல இருக்கிறது என்று பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

‘வெண்கல மங்கை’ மனு பார்க்கர் உடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி..

PM Modi Wishes Manu Bhaker in Olympics 2024 : மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

'முதல்வர் ஸ்டாலின் வழியை பின்பற்றுங்கள்'.. பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் அட்வைஸ்!

MP Dayanidhi Maran : ''தமிழ்நாட்டுக்கு வந்து தமிழை கற்க வேண்டும் என்றும் திருக்குறளை புகழ்ந்தும் பேசிய பிரதமர் மோடி இப்போது பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டார். பிரதமர் மோடி செய்த துரோகத்தை தமிழ்நாடு மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்'' என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

'நண்பர் டிரம்ப் மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்.. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை' - பிரதமர் மோடி

மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற முதல் இந்திய பிரதமர்... ஆஸ்திரியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா- ஆஸ்திரியா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மோடியும், கார்ல் நெக்மரும் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

'3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்ட இலக்கு'... ரஷ்யாவில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு!

''கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலக நாடுகள் ஆச்சரியமடைந்துள்ளன. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன''

'மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்'... ரஷ்யாவில் பிரதமர் மோடியை புகழ்ந்த புதின்!

''இந்தியாவில் நடந்த தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று பதவியேற்ற உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையிலான அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காக கடினமாக உழைத்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது''

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி... புதினுடன் சந்திப்பு... என்னென்ன விஷயங்கள் பேசப்படுகிறது?

ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

பிரதமர் மோடியை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்... தடபுடல் விருந்துடன் அடுத்த கொண்டாட்டம் ஆரம்பம்

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தனி விமானத்தில் டெல்லி திரும்பியதை அடுத்து, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்தியா வந்தடைந்த டி20 சாம்பியன்ஸ்... கேக் வெட்டி, ஆட்டம் போட்ட ரோஹித் ஷர்மா!

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தது.

மணிப்பூர்… மணிப்பூர்.. என முழங்கிய எதிர்க் கட்சியினர்… தொடர்ந்து உரை நிகழ்த்திய பிரதமர் மோடி!

மக்களவையில் எதிர்க் கட்சியினரின் தொடர் முழுக்கங்களுக்கு இடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

'மோடியின் உலகத்தில் உண்மையை அகற்றலாம்... ஆனால் நிஜ உலகில்...?'... ராகுல் காந்தி அதிரடி!

மக்களவையில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ராகுல் காந்தியின் இந்து மதம் குறித்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டங்கள் மூலம் அப்பட்டமான இந்தி திணிப்பு... பாஜகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

''அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு. இது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது''

நாடாளுமன்றத்தில் சம்பவம் செய்த ராகுல் காந்தி... அதிர்ந்த பாஜக எம்.பி.க்கள்... இன்று பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி!

நேற்று ராகுல் காந்தி பேசியபோது பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் 8க்கும் மேற்பட்ட முறை குறுக்கீடு செய்தனர். ராகுலின் இந்து மதம் குறித்து பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Rahul Gandhi: ராமர் கோயில் கட்டிய அயோத்தியிலேயே பாஜகவுக்கு பாடம்… மக்களவையில் ராகுல் காந்தி அதிரடி!

ராமர் கோயில் கட்டிய அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி...நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே!

மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சின்போது, ''நாடு முழுவதும் உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்புலத்தை சேர்ந்தவர்களே வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பதவியில் இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்தன...எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... சிறப்பம்சங்கள் என்னென்ன?

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று முதல் அமலாகி உள்ளது.

'அம்மாவின் பெயரில் மரம் நடுங்கள்'.... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

''தேர்தலுக்கு பிறகு மீண்டும் 'மன் கி பாத்' வாயிலாக பேசுவேன் என கடந்த பிப்ரவரி மாதம் கூறி இருந்தேன். அதன்படி இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன்''

டி20 உலகக்கோப்பை சாம்பியன்... இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து... வீரர்களிடம் போனில் பேசிய பிரதமர் மோடி!

''சூர்யகுமார் என்ன ஒரு அருமையான கேட்ச். ரோகித் உங்கள் தலைமைப்பண்பு வெற்றியை உறுதி செய்துள்ளது. ராகுல் டிராவிட் உங்களின் வழிகாட்டுதலை அணி தவற விடுகிறது''

நீட் தேர்வு மோசடிகள்.. லோக்சபாவை முடக்கிய இந்தியா கூட்டணி எம்பிக்கள்.. ராகுல் மைக் துண்டிப்பு

டெல்லி: லோக்சபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் ஜூலை 1ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். லோக்சபாவில் நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.